வெள்ளி, 2 ஜனவரி, 2015

vishnupuram ilakkia vattam vizha pathivugal


“ஏலேய் வீரண்ணா...அந்தக் கன்னுக்குட்டிய அவுத்து வுட்ரா..போய் சீர் செஞ்சிட்டு வரட்டும்....“

விஷ்ணுபுரம் இலக்கிய விருது வழங்கு விழா..2014

கோவை-27.12.2014

 

விழாவிற்குக் குறித்த நேரத்தில் செல்லமுடியவில்லை. பேருந்துகள் ஓடாத நிலை. அவர்களுக்கு ஆதரவான பேராட்டங்கள் என போக்குவரத்து நெரிசல். சாலைச் சித்திரங்கள் முழுக்க ஒவ்வொரு பேருந்துகளாக, வாகனங்களாக மறைகிறது. பழையபடி அவிநாசி சாலை மரங்களடர்ந்த வெளியாகிறது. கட்டிடங்கள் இல்லை. குடில்கள். சோலைகள், பறவைகளின் மாலைக் கூச்சல்.

         பொன் இளவேனில் வண்டியை அவிநாசி சாலையைத் தொடுவதற்கு சிரமப்பட்டார். சாலை முழுக்க வானரங்கள். சாரட் வண்டிகளில் வந்தவர்கள் நடு பாதையில் குதித்து நடந்து ஓடத் துவங்குகிறார்கள். செந்நாய்கள். சிறு சிறு குரங்குகள் புற்றீசல்கள் போல மனிதர்கள் தலைமேல் தாவி அரை ஆகாசத்திற்குக் குதிக்கிறது. அலைபேசியில் குப்புசாமிநாயுடு மருத்துவமனை பழையுர் சித்தாப்புதூர் வரையிலுமே கழுதைகள் சாலைகளை மறித்தபடியிருக்கிறதாம். கழுதைகளின் கனைப்பு விண் அதிர்கிறது. ரவி, செந்தில், யாழி உள்பட நண்பர்களுக்கு அழைத்தால் அவர்களும் நெரிசலில் மாட்டிக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். கழுதைகள் அணிந்திருக்கிற நேர்த்தியான உடையலங் காரங்கள் பார்க் அவென்யு,லீ, பாண்டலூன், க்ரோக்டைல் சீலாக் போன்ற உயர்தரமான உடைகளுடன் கழுதைகள் அணிவகுப்பு பொதுமக்களை வேடிக்கை பார்க்க வைத்திருக்கிறது.

       பாவம் ஜென்டை மேளக்காரர்கள் எங்குதான் நின்று வாசிப்பார்கள். திடுமங்கள் காய்ச்சிக் கொண்டிருந்த சங்க காலப்புலவர்கள் காய்ந்த நிலை போதும் என்று வாசிக்க ஆரம்பித்தார்கள். இளவேனில் என்னைக கண்டபடி ஏசினார். போச்சு டாக்குமெண்ட்ரிய மிஸ் பண்றோம் என்றார். அதற்குள் மணி பள்ளி வளாகத்தை அனுமன் தலைமையிலான வானரக்கூட்டம் பெயர்த்துக் கொள்ளத்துவங்க..அனுமன் இதெல்லாம் நான் செய்ய் வேண்டிய வேலை உன்ற வேலையென்னவோ அதைப் பார் என்கிறது. காவல்துறையினரிடம் எங்கள் அடையாள அட்டையைக் காண்பிக்க அவர்கள் பாதுகாப்பான வழியில் உள்ளே செல்ல அனுமதித்தார்கள். அரங்க கதவு திறந்த போதும் பிறகு நண்பர்கள் தென்படுகிறார்களா என்று கவனித்தபோது ஜென்டை மேளமும் வானரங்களும் கழுதைகளின் கணைப்பையும் கேட்க முடியவில்லை. யாதும் இயல்புக்குத் திரும்பியிருக்கிறது.

       முல்லையும் பவளமல்லியும் அணிந்த மங்கைகள் அரங்கிற்கு அப்பாலிருக்கிற கிணற்றடியில் நீர் மொள்ளுகிற சத்தம். குதிரைவீரர்கள் ஓய்வில் குறட்டை. கொம்பு வைத்துக்கட்டிய தலைப்பாகை சமையல்கார ர்கள் அக்காரவடிசலும் வெண்பொங்கலும் கிழவரம் சமைக்கிற மணம்.மிருதங்க வித்வான்கள் பட்டு அங்க வஸ்திரம் மணக்க ஜூனியர் பாலையாவின் பின்னால் வரிசையாக ஓடுகிறார்கள்.

கார் ஹார்ன் அடிக்கவும் அந்த வெளிச்சத்தில் அந்தச் சித்திரங்கள் காணாமலாகிறது. அரங்கில் இருக்கைகள் மேல்வரிசையில் மட்டும் காலியாக இருக்க அமர்ந்தோம். மின்சாரம் பளீரென்று மின்னியதான அழகு. இரண்டாவது முறையாக பெண்கள் இல்லாத மேடை. கோவை இலக்கியச் சந்திப்பிற்கு வராத பல நண்பர்கள் அங்கு வந்திருந்தார்கள். சரிதான் முழு ஞாயிற்றுக்கிழமையை இலக்கியத்திற்கு ஒதுக்க முடியுமா என்ன. கறியும் சோறுமா போடப்ப்போகிறார்கள். மணி பள்ளியில் தேநீர் கூட இல்லை. எனக்கு வெளியில் கண்ட சித்திரங்களின் மீது கவனமிருக்க இளவேனிலிடம் கொஞ்சம் வெளியில் சென்று வரலாமா என்றேன். அவர் என்னைத்திட்டினார்.

       நாங்கள் போனபோது நிகழ்வுகள் சில முடிந்து விட்டிருக்கிறது. சரியாக  டி.பி.ராஜீவன் பேச அழைக்கப்பட்டார். அவர் சாருவைப் போல இருக்கறார் என்று சாரு இல்லாத குறை நிவர்த்தியானது. சாருவை நிகழ்ச்சிகளுக்கு அழைப்பது சிரமம்தான். அவருடைய செல்ல நாய்களை அவர் பிரிவதேயில்லையாம்.  நிகழ்ச்சி நடத்துபவர்களின் பாடு திண்டாட்டம்தான். நான் முதலில் சாருவோ என்று பயந்தேன். இரண்டு நாள் அரங்கு கூட்டங்களில் நகைச்சுவை ததும்பத் ததும்ப இலக்கிய உரைகளை நிகழ்த்தியதாக நண்பர் செல்வேந்திரன் அறிமுகம் செய்தார். அவர் மலையாளத்தில் பேசுவார் என்று நினைத்த மாத்திரம் ஆங்கிலத்தில் பேசினார். மலையாளத்திலேயே பேசியிருக்கலாம். ஆங்கிலத்தில் ராஜீவ்காந்தி ஆங்கிலம் என்று ஒரு வகையை ராஜீவ் காந்திதான் அறிமுகம் செய்தார். 91ல் அவர் படுகொலை செய்வதற்கு முன்பு அவர் தமிழ் மண்ணில் பேசிய ஆங்கிலம் குழந்தைகளுக்குக் கூட புரிவதாக அமைந்தது. இன்று மார்க்கெட் துறைகளில் ராஜீவ் ஆங்கிலம்தான் கொடிகட்டிப்பறக்கிறது. ஆனால் அது யாருக்கும் தெரியாது. அப்படித்தான் பல தெரியாமைகளால் இந்த நாட்டின் மேன்மை மிகமிக பின் தங்கிக் கொண்டே போகிறது.

கோவைதான் கேரளா. கேராளதான் கோவை. அவருக்கு வயலினில் ஆர்வம் இருக்கும் போல. ஜெ அவ்வப்பொழுது நண்பர்களிடம் அரங்கத்தைக் கூட்டத்தைக் கட்டுபடுத்துகிற துண்டுச்சீட்டுகளை எழுதிக் கொண்டிருக்க அதை இளம் வாசகரும் விஷ்ணுபுர இலக்கியவட்ட நண்பர் செந்தில்குமார்தேவன் செல்வேந்திரனிடம் பரிமாறினார்.

        இலக்கியத்தின் அழகு பேச்சில் தெரியும் என்பது போல வயலின் கொஞ்ச நேரத்தில் தூர்தர்சனின் துக்க வயலின் ஆனது. துண்டுச்சீட்டு போனது. முடித்துக் கொண்டார். ஜெ அவர் முகம் பார்க்கவில்லை அவரும் பார்க்கவில்லை. வசந்தபாலன் வந்தபாலகன் போல பேசினார். அது ஒரு ஃபேசன் போல. நல்ல இயக்குநர் என்றால் அப்படித்தான் பேசவேண்டுமொ..ஜெ கண்களின் வழியாக இந்த உலகத்தைப்பார்க்கிறேன் என்றார். மிக விரைவில் தனது பேச்சை முடித்துக் கொண்டார்.

     பிறகு புவிரயசு வந்தார். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் நண்பர்களை வெகுவாகப்பாராட்டினார். தனக்கும் தன் கவிதை கொள்கைகளுக்கும் நேரெதிரான களம் அது. ஆனால் கடந்த இருநாட்களாக நடந்த உரையாடல்கள் தனக்குப்புதிய இளைஞர்களின் வாசிப்பு முறைகள் ஆச்சர்யம் தருவதாகச் சொன்னார். கமல், ஞானக் கூத்தன் தங்கள் மூவருக்குமான நட்பு குறித்துப் பேசினார். அமரகாவியம் எனும் திரைப்படத்திற்கு வசன கவிதைகளாகவே இருவரும் எழுதியதை ஞாபகப்படுத் தினார். சாகித்ய அகாடமி குறித்த அவருடைய செய்திகள் ஆச்சர்ய்ப்படவைத்தது. அவருடைய குரலும் அவருடைய கவிதைகள் போலவே ஆண்மையும் கொள்கையும் கொண்டதாக அமைந்தது. சென்ற விழாவில் விழாவைக் கோவையில் நடத்திக் கொண்டு கோவையிலிருந்து யாரையும் விழாவிற்கு அழைக்கவில்லையென்பதை நான் சுட்டியிருந்தேன். இந்த முறை அந்த குறையை நிவர்த்தி செய்யும் விதமாக புவியரசு அவர்களை அழைத்தது பாராட்டப்ப்படவேண்டியது.

        காலையில் கோவை இலக்கியச் சந்திப்பிறகு வந்திருந்த பலரிடம் மாலையில் உள்ள இந்தநிகழ்வை ஞாபகப்படுத்தியபோது அவர்களிடமிருந்த வந்த பதில்களை இங்கு பதிவிடுவது சரியல்ல. இதே நேரத்தில் ஓசை சூழல் சந்திப்பு நடந்து கொண்டிருந்தபடியால் அரங்கு கொஞ்சம் டல் அடித்தது. எதிர்பார்த்தளவு மலையாள சமூக மக்கள் விழாவிற்கு வரவில்லை. அவர்களுடைய கார்கள் எனக்குத் தெரியும். மணி பள்ளிக்கு வழக்கமாக வருகிற பிராமண வாசகர்கள் வருகையும் குறைந்து காணப்பட்டது. இடதுசாரி ஆதரவாளர்கள், தமிழ் இனஉணர்வாளர்கள், மார்க்சிய லெனினியத் தோழர்கள். தமிழ் இலக்கிய ஆதரவாளர்கள் பெரியார் திராவிடக் கழகத்தார்கள் என்பதாக வருகை குறைந்த காரணம் தெரியவில்லை.ஒரு வேளை ஜெ..வின் அதிரடிகள் சமீபத்தில் எதுவும் சோபிக்கவில்லையோ என்னவோ. வழக்கமாக கோவையில் இயங்குகிற மலையாள சமூக அமைப்புகளிலிருந்து நிறைய பேர் கலந்து கொள்வார்கள். தமிழ் மலையாள வாசகர்கள் பெருமளவில் கலந்து கொள்கிறவர்கள் எழுபது சதவிகிதம் ஆப்சென்ட். அவர் அதிரடியாக ஆட நினைக்கும் போது பேருந்துகளின் ஸ்டிரைக் மாதிரி ஏதாவது வந்து கெடுத்துவிடுகிறது. இயல்விருதின் மரணம் என்றெழுது அந்த விருதும் கிடைத்துப் போக பொசுக் என ஆகிவிட்டது. சாகித்ய அகாடமிக்கு ஜெ..வின் நூல்கள் எதுவும் வரவேயில்லையென்று புவியரசு போட்டுடைக்க அரங்கம் ஒரு கணம் அதிர்ச்சியடைந்து போனது.

      கோவை இலக்கியச் சந்திப்பின் தொடர் பங்கேற்பாளர்கள் தவறாமல் கலந்து கொண்டிருந்தார்கள்.

          சா.கந்தசாமி தங்களின் பழம் காலத்தின் ஞாபகங்களைப் பேசினார். கூத்துப்பட்டறை முத்துசாமி உள்பட பல நண்பர்களை நினைவு கூர்ந்தார். காலம் என்பது ஒரு வகைதான். நாமாக உருவாக்கியது. குறிப்புணர்த்துவது பற்றியும் படிமங்கள் அடுக்கப்படுகிற கவிதைக் காட்சிகளையும் அழகாகச் சொன்னார்.

  பாவண்ணன் உரைதான் மிக முக்கியமானதாகவே அமைந்த நிகழ்வு என்று சொல்லாம். வெண்மணி தியாகிகளை நினைவு கூர்ந்த ஞானக்கூத்தனின் உவமைகளைச் சொன்னார் கர்ப்பிணியின் வயிறு. நாகரீகம் என்பதாகத் தொடங்கி அவர் உரை மனித உயிர்களின் பலிகள் பற்றியதாக தொடர்ந்தது. நா தழு தழுத்த குரலில் பல எண்ணற்ற மனித பலிகளை அவர் அடையாளம் காட்டினார். ஞானக்கூத்தனின் கவிதைகளில் உள்ள சமூக உணர்வுகளைச் சுட்டிக்காட்டினார். என் சிற்ற றிவிற்குட்பட்டவகையில் ஞானக்கூத்தனின் கவிதைகளில் சமூக உணர்வு இருக்கிற என்று பேசப்பட்ட உரை இதுவாகத்தான் இருக்கும். ஒரு மார்க்சீயர் பேசியிருந்தால் எப்படியிருக்குமோ அப்படியாக அமைந்து போனது. அரங்கிற்கு அது ஒப்பாரியாகத் தெரிந்தது போல அறியமுடிந்தது.

         கவிஞர் இசை பேசவந்தபோது ஞானக் கூத்தனின் குசு கவிதையிலிருந்து தொடங்கி குசுவின் பரிணாமவளர்ச்சியையும் அதன் வளர்சிதை மாற்றங்கள் பற்றிய ஞானக்கூத்தன் மீதான கட்டுரை கம் கவிதையை வாசித்தார். பிறகு அது தனது கவிதையில் ஒன்று என்றார். ஜெவும் அரங்கமும் நெளிகிறது. இரண்டு நாள் நெருக்கமான அறைகளில் சரியாகச் செரிமானம் ஆகாத பங்கேற்பாளர்கள் தங்களை மறந்து குசுமலை பொழிந்து கொண்டனர். இதுதான் சமயம் என்று அரங்கம் குசுமாலை பொழிந்து மாலை சாற்றியது. சரஸ்வதி சபதம் படத்தில் ஊமையாக இருந்த சிவாஜிக்கு கடவுள் கலைவாணி தோன்றி பேசவும் பாடவும் கவிதைகள் புனையவும் வரமளித்து அவரை வித்யாபதியாக மாற்றிதை தந்தை வந்து ஆச்சர்யம் கொண்டு பெருமிதம் கொண்டழுத போது

“என் மகன் வித்யாபதியா..“

“ஆம் அப்பா உங்கள் மகன் வித்யாபதிதான்..இதுநாளும் கலைமகளுக்குப் பூமாலை சூட்டிக்கொண்டிருந்த நான் இன்று பாமாலை சூட்டினேன் அப்பா..“ என்றது போல அங்கத கவிஞர் பகடி வித்தைக்காரர் ஞானக் கூத்தனுக்கு குசுமாலை அணிவித்து வாழ்த்தினார் இசை. அங்கத குசுக்கள் சூழ ஞானக்கூத்தனின் மேகங்களாக நிறைகிறது. இசையைத் தொடர்ந்து பார்வையாளர்களும் தங்கள் குசுக்களின் மூலமாக வாழ்த்தினார்கள். கெட்டிமேளத்தின் பொழுது நிலவும் பரபரப்பும் உற்சாகம் நிகழ்வதானது. இசையின் இந்த தூஸ்ரா பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாத ஜெ. மிகவும் பதற்றமடைந்தார். அவருடைய ஸ்டம்புகள் பறக்கிறது.

இந்தியன் படத்தில்தான்  முதலில் குசு பற்றிய அறிமுகம் வருகிறது. படத்தில் சுஜாதாவால் எழுதப்படாத வசனம். கவுண்டமணி டைம்மிங் சென்சில் ஸ்பார்ட்டில் பேசினாராம். செந்திலை பன்னி செல்வம் என்று அழைக்கவும் செந்தில் ர்ர் ஏன் விட்டே என்று கேட்க கவுண்டமணி சுஜாதா எழுதாத வசனமாக பின்புறம் காட்டிக்கொண்டு காட்சியில் நிற்கிறவர்களை பெண்ணைப் பார்த்து கவுண்டமணி ஏங்க நீங்க ர்ர் விட்டீங்களா என்று கேட்டுவிட்டு அவங்க ர்ர் விடலைங்களாமா என்பார். செந்தில் யோவ் நான் அந்த ர்ர் ர சொல்லலையா.. என்று மறுபடியும் சத்தமிடுவார்.

இந்தப் படம் வெற்றியடைந்த பிறகு தொடர்ச்சியாக தமிழ் சினிமா அன்றிலிருந்து குசுவைக் கடைப்பிடித்தது. தமிழ்சினிமா வெற்றியடைந்த படங்களில் வருகிற காட்சிகளை அப்படியே பயண்படுத்துவதை நாம் அறிந்துள்ளோம். தனுசும் செல்வராவகனும் அந்த வழியைத்தான் பின்பற்றியிருக்கிறார்கள். தங்கை கற்பழிப்பு, லாரியில் அடிபடுவது, தாய் கொல்லப்படுவது. நண்பன் சாவது. கண்ணாடிகள் உடைவது. பஸ்கள் வந்து நிற்பது. குழந்தைகளைத் தொங்கவிடுவது. மெயின் ஆப் செய்வது. கதாநாயகிகள் குளிப்பது. காமெடியன் ஒன்னுக்குப் போவது. வயிறு பேதியாகி கழிவறையில் அமர்வது. தேநீர் கண்ணாடி டம்பளரில் சாப்பிடுவது இப்படியாக எல்லாவற்றையும் சேர்த்துக் கொள்வது போல குசுவும் சேர்க்கப்படத் துவங்கியது. நவீன கவிஞர்கள் மறந்த சந்தமும் ஓசை நயமும் செப்பலோசையையும் காமெடியர்களுக்கு வசனம் எழுதுகிற காமெடி டிராக் எழுதுகிற டைமிங்க் ரைமிங் ஜோக்குகளில் காண்கிற கேவலத்தைக் கண்டித்து ஜெ தன் வாழ்நாளில் ஒரு கட்டுரையும் எழுதவில்லை. அல்லது கவிதை விமர்சகர்களும் எழுதவில்லை. ஞானக் சுத்தன், தேவதேவன், பிரபஞ்சன் உள்பட யாரும் எழுதவில்லை. கண்டிக்கவில்லை.

ஞானக் கூத்தன் கவிதைகளில் சிறப்பம்சம் நிறைந்த கவிதைகளை எடுத்தாளாமல் குசு கவிதையை எடுத்துக் கொண்ட காரணம் அங்கத பகடிக் கவிதைக்காரனுக்குள்ள பிரச்சனைகளைச் சபை முன் வைத்தார். ஒரு வகையில் ஞானக்கூத்தனும் அதேயளவு அறிந்து வைத்திருக்கிறார் என்று கருதினாரோ என்னவோ. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் முதல் டெஸ்ட் மாட்ச் ஆடுகிற வாய்ப்பு அமைந்த மகிழ்ச்சியில் ஜெ வின் பந்துகளை நொறுக்கியதை அரங்கப் பார்வையாளர்கள் அம்பயரையும் காலரியையும் பேந்தப் பேந்தப் பார்க்கத் துவங்கினார்கள்.

ஞானக் கூத்தன் தர்மசங்கடத்துடன் தலையைக் கவிழந்து கொள்ள கார்த்திக் “இப்ப அவர் கவிதையப் பேசறாரே அது உங்களப்பாத்துதா..இப்ப அவர் குசுவப் பத்திச் சொல்றாரே..அது உங்க கவிதையைப் பத்திதான்..இப்ப நான் குசு விட்டனே..அது கூட உங்களுக்காகத்தான்..“ என்றார் பிறகு ஞானக் கூத்தன் கவனிக்க ஆரம்பித்தார்.

முன்வரிசையில் அமர்ந்திருந்த விஜய் சேதுபதி என்னாச்சி..என்றார். காந்திமதி எலே வீரண்ணா..என ஆரம்பிக்கிறார். தேவதேவன் எழுந்து மூனாவது துலுக்கு துலுக்கினார். நான்கைந்து காளைகள் அரங்கினுள் பாய்கிறது. நளினிகாந்த் உடனடியாக கதவுகள் திறந்துவிடுகிறார். ராகவேந்திரா லாரன்ஸ் தனக்கு  முன்னால் வைக்கப்பட்டிருந்த நீலம் பச்சை சிவப்பு கருப்பு பக்கெட்டுகளில் முறையே தேள்கள். சிறுபாம்புகள், பல்லிகள், தவளைகள் வைத்திருக்கிறார். ஒவ்வொருவர் பேசி முடித்த பிறகும் கொஞ்சம் ஜந்துகளை எடுத்துத் தன் பனியனில் விட்டுக் கொண்டு மேடையின் முன்னால் வடது புறமிருந்து தென் புறத்திற்கு வயிற்றுக் கடுப்பு ரயில் நடனமாடி வந்து நிற்பதும் சிவமணி டிரம்ஸ் குச்சிகளால் கதவுகள் நாற்காலிகள் கைப்பிடிக் கம்பிகளில் வாசித்து முடிக்கிறார். ஒரு சமயம் உணர்ச்சிவயப்பட்டு கன்ந்சாமியில் தலையில் வாசிக்க மேடைக்கு ஓடவும் தடுத்து நிறுத்தப்படுகிறார்.

         ஜெ..தன் உரைக்கு வந்தவர் மேடையில் அனைவரைப் பற்றியும் சில வார்த்தைகள் பேசும் போது பதற்றமடைந்தார். அவருடைய இரண்டு வகையான குரல்களான பெங்களுர் ரமணியம்மாள் மற்றும் பித்துக்குளி முருகதாஸ் குரல்கள் தழுதழுக்கப் பேசினார். நக்ஸ்லைட், ஜென், பஞ்சதந்திரம், சார்லிசாப்லின் என்று ஏற்கெனவே பத்து ருபாய் ரயிலடி புத்தகத் துணுக்குளை நினைவுட்டினார். நிகழ்ச்சி ஒன்பதரை மணி வரைபோகும் என்று இருந்த நேரத்தில் எட்டுமணிக்கு நிகழ்ச்சிகள் முடிந்து போனது. பதினாராம் நாள் காரியங்கள் நடப்பது போன்ற ஈனஸ்வரத்தில் குசுக்கள் நிரம்பிய அரங்கம் தன்னை விடுவித்துக் கொள்ள முனைகிறது. பார்வையாளர்கள் சிலர் தெறிந்து வெளியே வந்தார்கள். தன் பதற்றத்தில் புவியரசு பற்றிக்குறிப்பிட மறந்த போது செல்வேந்திரன் நினைவுட்டினார். புவியரசு மற்றும் ஞானக் கூத்தன் நட்பும் இருவேறு கவிதை தளங்களை அவர் சுட்டிக்காட்டினார். அதற்கு முன்பு வரையிலும் இடைவிடாது கவிதை ஒன்றே ஒன்றுதான் என்று நிறுவி வந்தார். கவிதை குறித்த ஆர்டிஓ நேம் பிளேட்கள் எவ்வளவு வைத்திருக்கிறார் எனத் தெரியவில்லை.

            நானும் இளவேனிலும் நண்பர்களும் காற்றாட வெளியில் வந்தோம். மணி பள்ளி நார்மலாகியிருந்தது. அருகிலிருக்கிற இந்திய விமானப்படையைச் சார்ந்த குதிரைகளுக்கான நடைபயிற்சியும் பறக்கும் பயிற்சியும் நிகழ்கிறது. குளம்பொலிகள் அற்புதமாக கேட்கிறது.

எந்த சித்திரங்களும் இல்லை. வயதான பிராமணத்தம்பதிகள் அரங்கிற்கு அருகிலிருக்கிற பெருமாள் சன்னிதிக்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள். அங்கிருந்து மார்கழியின் ஒலி பெருக்கிகள் கேட்கிறது. அங்கதம் பேசுவதும் எழுதுவதும் பகடி செய்வதும் காலங்காலமாக மறுக்கப்பட்ட சூத்திரர்கள் திரிந்து கொண்டிருக்கிறார்கள். எப்சியும் பிசியும் எம் பி சி கொஞ்சமாகப் பேசலாம் பகடி..அங்கதம். மற்ற இடைசாதியர்கள் பேழவே கூடாது என்பதாகத்தானே மனு சொன்னது. சிறுபான்மையினர் பழங்குடிகள் பேசவே கூடாது. அந்தந்த சொற்களை அந்தந்த சாதிக்காரர்கள்தான்  பேச வேண்டும். பேசும் குரலின் பாவனையிலேயே சாதிகளைக் கண்டுபிடித்த சமூகமாயிற்றே..மற்றவர்கள் அவர்களுடைய பாணியில்தான் எழுதவேண்டும். கேட்வாசலில் பாட்ஜ்கள் டாலர்கள் விற்றுக் கொண்டிருந்த ராசாசி எங்களிடம் ஆதரவாகச் சொன்னார்.

         ஞானக்கூத்தன ஏற்புரையில் இவர்கள் பாராட்டியது எனக்கு குளுகுளுவென்று இருந்தது. அரங்கிலிருப்பவர்களுக்கு காதில் வேறுமாதிரி விழுக அவர்கள் அங்கதம் கருதி சிரித்துமகிழ்ந்தார்கள். ஒலிபெருக்கியின் அருகில் நின்று பேசியதால் சிவகுமார் பேசுவது போலிருந்தது. ஏற்புரையை நீளமாக எடுத்துக கொள்ள மக்கள் வெளியேறினார்கள்.தன் உரையை அறையிலெயே வைத்து விட்டு வந்துவிட்டதால் பேசுகிறேன் என்று பேசினார்.

        ஒரு இயல்பான பிராமணரின் வாழ்க்கைச் சித்திரங்களே தனது கவிதைகள் என்பதாக அவருடைய ஏற்புரை அமைந்தது. அவர் எப்பொழுதும் மறக்காமல் குறிப்பிடுகிற நண்பர்களைக் குறிப்பிட்டார் ஒரு கணம் வாணம்பாடிகள் குறித்து என்னிடமே ஏன் கேட்கிறீர்கள் என்று பத்திரிக்கையாளர்களைக் கடிந்து கொண்டதும் தன் பேட்டிகள் வாணம்பாடிகள் குறித்துத் தவறாகவே புரிந்து கொள்ளபட்டிருக்கிறது என்று  அவர் பங்கிற்கு பெரிய பாம் ஒன்றைப் போட்டார்.

          சா. கந்தசாமி, வசந்தபாலன், புவியரசு உள்ளிட்ட பெரிய இலக்கியவாதிகள் இருந்தும் அரங்கு எட்டு மணிக்கு முடிவுக்கு வந்த காரணம் அங்கத நாற்றம் அதிகமாகவே நெடியடித்ததும் ஒன்று. மேடையின் ஓரத்தில் நண்பர் ஒருவர் முகச்சவரம் செய்த பெருமாள் முருகன் போலவே தெரிந்தார். அவர் மட்டும் பேசவில்லை. ஒரு வேளை நாங்கள் வராத போது வரவேற்புரை வாசித்திருப்பாரோ என்னமோ..

அரங்க வாயிலிலிருந்து பராமரிப்பாளர்களிடம் நானும் இளவேனிலும் பொங்கல் சீசன் கர்நாடக சங்கீத கச்சேரிகள் நடக்கவிருப்பதால் அரங்கத்தை பத்து நாட்கள் சன்னல்கள் கதவுகள் ஆகியற்றை திறந்தே வையுங்கள் காற்று வெளியேறட்டும் என்று சொல்லிவிட்டு வந்தோம்.

             இரண்டு நாள் உள் அரங்கு கருந்தரங்குகள் . இலக்கிய உரையாடல்கள். சமகாலப் படைப்பியக்கங்கள் பற்றிய மதிப்பீடுகள்,தற்கால மலையாளக் கவிதைகள் கருத்தரங்கு என்பதாக இந்த ஆண்டும் ஏராளமான பொருட்செலவில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்கள் உழைத்திருக்கிறார்கள்.

       ஜெ..வைப் பேச அழைத்தபோது எழுத்து அசுரன் என்று விளித்து அழைத்தார்கள். விமானம் ஒரு மணி நேரம் தாமதம் என்றபோது தாமதிக்காமல் சங்கடப்படாமல் அதற்குள் ஒரு நாவல் எழுதிடுகிறேன் என்றாராம். அவருக்கு இணை யாருமில்லை என்று புவியரசும் பாராட்ட நானும் இளவேனிலும் யோசித்தோம் யார்தான் இருக்கிறார்கள். அப்படியானால் அவரையும் அவர் நிகழ்வையும் பாராட்டுவதற்குத் தகுதியானவர் ராஜேஷ் குமார்தானே. இனி ஒவ்வொரு நிகழ்விற்கும் அவரையே தலைமையேற்பதுதான் சரி. அவர் வீடும் ராஜதானிக்கு அருகில்தானே இருந்தது. கண்ணாடி, சில்க், மரம். கிராணைட், டைல்கள், செயற்கை கற்கள். என்று விற்க வந்தவர்கள் படிப்படியாக தேவாங்க நெசவு செட்டியார்களின் நிலங்களை அபகரித்த இடங்களல்லவா அந்த நிலங்கள் யாவும். ராஜதானி அரங்கிற்குள் நின்றபோது ஒரு நெசவாளியின் குரல்வளை மேலே நிற்பது போன்றேயிருந்தது.

தங்கள் நிலத்தை, தங்கள் வாழ்வை எல்லாவற்றையும் இழந்து விட்டு புட்டு தோசை மாவுகள் விற்று கொண்டிருந்த செட்டிமார்களை ரத்தக்கண்ணீர் கசிய கண்டோம். அவர்களின் வாழ்க்கை குறித்த கவிதையை உணர்வுப் புர்வமான கவிதைகளைப் பற்றிய உரையாடல்கள் எதுவும் சத்தியமாக இல்லை. அங்கு அந்த இடத்தில் இரண்டு நாட்கள் இருந்த ஜெ உள்ளிட்ட கவிதை புரமோட்டர்களுக்குத் தோன்றாத காரணம் என்ன என்று விவாதித்தபடியே ஊர்வந்தோம்.

       ஜெ..வின் எழுத்து தற்காலத்தில் சாண்டில்யனின் வந்து சேர்ந்து புஷ்பா தங்கத்துரை சாயலிலும் (அ) ஸ்ரீவேணுகோபாலனின் சாயலும் ஸ்டெல்லா புருஸ் வடிவத்தில் வந்து கடைசியாக ராஜேந்திரகுமார் பாணிக்கு வந்து சேர்ந்திருக்கிறது. அவர் அடுத்த கட்டமாகத் தொடக்கூடிய இடமாக ராஜேஷ்குமாரின் இடம்தான் போலிருக்கிறது. எல்லாருமே பாராட்டிக் கொண்டிருந்தால் யார்தான் அவர் எழுத்தின் தரத்தை உண்மையாகச் சொல்லுவது. அல்லது உண்மையான தரம் பற்றிச் சொல்கிற தைரியம் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்களுக்கு எப்படியிருக்க வாய்ப்பு..

ஒரு முறை நடிகர்திலகம் திருவையாற்றில் போட்டியிட்டபோது அவர் வெற்றி உறுதி என்று சொன்னார்கள். ஆனாலும் சிவாஜிக்கு உள்ளுர உதறல். வந்த தகவல்கள் வேறுமாதிரி. சிவாஜி நேரடியாக களத்திற்குச் சென்றார் மாறுவேடத்தில் தேநீர்க்கடைக்கு. அங்கு நைசாக விசாரிக்கவும் நீங்கள் மூன்றாவது இடத்தில் இருக்கீறீர்கள் என்று சொன்னார்கள். அதிர்ச்சியடைந்த சிவாஜி தன் பிரச்சார மூட்டைகளைக் கட்டிக் கொண்டு உடனே சென்னை திரும்பினார். தேர்தல் முடிவில் சிவாஜி மூன்றாவது இடம் மற்றும் டெபாசிட் இழந்தார். கட்சி துடைத்து எறியப்பட்டு அரசியல் துறவறம் மேற்கொண்டார்.

       கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒரு நாற்பதாயிரம் வாக்குகளை ஒரு மகத்தான கலைஞன் பெறமுடியவில்லை.

        தன் அரசியல் வாழ்க்கையைச் சூறையாடிய மேஜர் சுந்தர்ராஜன்,தளபதி ராஜசேகர்,சி.வி. இராஜேந்திரன் ஆகியோரைக் கடிந்து கொண்டார். அப்பொழுது அவர் தன் சொந்தப் பணம் கோடிக்கணக்கில் இழந்திருந்தார். சிவாஜியின் கட்சியும வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தார்கள். ஜெ.. அந்த நிலையை முன்கூட்டியேத் தெரிந்து கொள்ள முன்வரவேண்டும். தன் வாழ்நாளிலேயே தன் சகாப்தத்தின் சரிவையும் தன் வாசகர்களைப் படியப் படிய இழந்தவர்களில் சிவாஜியைப் போல இன்னொருவர் ஜெயகாந்தன். மார்க்சிய தளத்திலும் நவீன வாசகர்கள் தளத்திலும்  வெகுசன வாசிப்பு நிலையிலும் முழுமையாகத் தான் இழந்து போனதை இப்பொழுது அவர் கண்டு களித்தபடியிருக்கிறார். மார்க்சியத்தைக் கழுவி ஊற்றியதற்காக முதலாளிகள் அவருக்கு விருதுகள் மேல் விருதுகள் அளித்து சாந்தப்படுத்தினார்கள். ஆனால் முதலாளிகளின் குழும வாசகர்களாவது வாசிக்க வைத்தார்களா இல்லை...

தமிழ் இந்து நாளிதழ், இந்து நாளிதழ்களில்தான் பெரும்பாலான விஷ்ணுபுரம் ந்ணபர்கள் பணியாற்று கிறார்கள். ராஜேஷ்குமாரை அழைத்து இந்து நாளிதழ் விழாவில் பேசவைத்தீர்கள்தானே நண்பர்களே..

இந்த விழாவிற்கும் அவரை அழைத்திருக்கலாமே. ஆயிரத்து ஐநூறு நாவல்கள், மூவாரயிரம் சிறுகதைகள். தமிழின் கடந்த இருபது ஆண்டுகளாக பெஸ்ட் செல்லர் ரைட்டர் ராஜேஷ்குமார். இந்த விழாவிற்கு அவரை அழைத்திருக்கலாம். நண்பர்கள் கவலை கொள்ளவேண்டாம். ராஜேஷ் அண்ணன் இருக்கிறார். அவருக்கும் வேண்டிய ஆட்கள் எல்லாத்துறைகளிலும் இருக்கிறார்கள். ஜேம்ஸ் ஹெட்லி சேஸ், அகதா கிருஷ்டி, ஸெர்லக் ஹொம்ஸ் பியோதர் பாதெலர் என்று அவரும் கலக்குகிறார் போதாதா. அவரையும் கௌரவப்படுத்தியது மாதிரியிருக்கும். உங்களுக்கும் பிரயோஜமாக இருக்கும்.

         வாழவைத்த கோவையை மறக்காதீர்கள். உங்கள் உழைப்பு நேசிக்கப்படுகிறது. நீங்கள் ஞானியைத் தவிர்க்கிற காரணம் இன்னும் அதிர்ச்சியளிப்பதாகவே உள்ளது. தன இறுதிகாலத்தை கொடுமையுடன் வாழ்ந்து வருகிறவர். கடந்த ஆறேழு ஆண்டுகளாக சாகித்ய அகாடமி விருதுகளுக்கு பலருக்குப் பரிந்துரை செய்தவர். பூமணியின் நாவலை அழகுற படித்து ஒழுங்கு செய்தவர். அவரை சாகித்ய அகாடமியும் கைவிட்டது. நீங்களும் கைவிட்டு விட்டீர்கள். அவருக்கு நீங்கள் வெளியில் தெரியாமல் உதவுகிற காலம் அல்ல இது. அறம் எழுதிய கைகளே..உண்மை பேசுகிற உள்ளங்களே.. உங்களிலும் ஈரநெஞ்சம் கொண்டவர்கள் இருப்பீர்கள்.

தமிழில் தீவிர இலக்கியம் பேசுகிறவர்கள் எப்படி குறிப்புணர்த்துவதுதான் இலக்கியக் கொள்கை என்று முடிவு செய்கிறீர்கள். நாங்கள் வீரர்கள். கலிங்கத்துப்பரணி எழுதியவர்கள். அங்கதமும் பகடியும் பசியேப்பக்காரனுக்கு வராது. களத்தில்தான் விளையாட முடியும். அதுதான் முறை. காலரியிலோ பால்கனியிலோ விளையாட முடியாது.

புவியரசு சொன்னது போல நாங்கள் தெருவில் சென்று மக்களுக்கு கவிதை சொல்பவர்கள். நீங்கள் பேசுகிற கவிதை இலக்கணங்கள் பத்து வருடங்களுக்கு முன்பு காலாவதியான குறிப்புகள் பேசுகிறீர்கள். சரியான, சௌகரியமான, தோதான, அடக்கமான, வசதியான, அல்லது பிறப்பிலேயே நிலவுடைமைச் சாதிக்காரர்களாக, சனாதனிகளாக, அல்லது அடிபணிந்து போய்க்கொள்கிற சிறுபாண்மை சாதியப் படைப்பாளர்களைத் தெரிவு செய்து கொண்டு அதன் கட்டமைப்பில் உங்களுக்கான இலக்கியத்தைக் கடந்த நான்கு ஆண்டுகளாகச் செய்து வருகிறீர்கள். இது நீங்கள் முடிவு செய்கிற இலக்கியக் கொள்கை. அதில் யாரும் தலையிட முடியாது என்பது தெரியும்.

முயற்சியும் முடிவும் இயக்கமும் உங்களுடையது. உங்கள் சுதந்திரம் உங்கள் பணம் ஆனால் நண்பர்களே இலக்கியம் அரசியல் சினிமா இவை மூன்றும் பொதுவானவை. இந்த மூன்றிலும் ஆழமான பார்வையை நீங்கள் செலுத்தவேண்டும்.

         உங்களால் எளிதில் வெற்றி கொள்ளக்கூடியவர்களைத்தான் தெரிவு செய்கிறீர்கள். ஒரு திரைப்படத்தில் ஓமக்குச்சி நரசிம்மனை கவுண்டமணி அடித்துத் துவைப்பார். அப்படித்தான் உங்கள் தெரிவுகள் அமைகிறது.

          உங்கள் அடுத்தடுத்த தேர்வுகள் சரியாக அமைய வாழ்த்துக்கள். அடுத்த ஆண்டு மேடையில் பெண் படைப்பாளர் ஒருவருக்கு பேச வாய்ப்பு வழங்க வேண்டும். அல்லது வருகிற சென்னை விழாவில் ஒரு வருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். பாருங்கள். இதெல்லாம் வேண்டுமென்று தவிர்க்கிறீர்களா அல்லது இயல்பாகவே தவிர்க்கிறீர்களா.. போகட்டும்..

          விஷ்ணுபுரம் விழாக்குழுவினர் கச்சிதமாகச் செயல்பட்டார்கள்.  இதை விடவும் பிரமாண்டமான விழாவாக எழுத்தாளர் பூமணிக்கு சென்னையில் 11 ஆம் தேதி நடத்துவதாகத் தெரிவித்தார்கள்..

வாழ்த்துகளும் உங்கள் முயற்சிகள் தொடரட்டும்...உங்கள் தலைமைக்குச் சரியானத் தகவல்களை அளியுங்கள்.. அதுதான் உங்கள் உழைப்பைப் பறைசாற்றும்..நீங்கள் பெருமதிப்பு அடைவீர்கள். தமிழிலக்கியம் உங்கள் ஆசைப்படி வளரும். உங்கள் தலைமையாசிரியரின் நூல்கள் அதிகம் விற்கும். பண்டல்கள் திரும்பிப் போகாது. பதிப்பாளர்கள் மகிழ்ச்சியடைவார்கள்.

நாங்கள் சத்தியமாக மகிழச்சியடைவோம்..

கோவையைப் பெருமைப்படுத்தும் நண்பர்களே.. உங்களுக்கு ஒரு ராயல் சல்யுட்.....

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக